0 0
Read Time:1 Minute, 20 Second

மயிலாடுதுறை, மார்ச்- 08:
மத்திய அரசு மாதந்தோறும் கேஸ் விலையை உயர்த்தி ஏழை எளிய மக்களை வஞ்சிப்பதாக கூறி மயிலாடுதுறை அருகே கூறைநாடு பகுதியில் உள்ள காமராஜர் மாளிகை முன்பு மகிளா காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மகளிர் நிர்வாகிகள் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து மத்திய அரசு கேஸ் விலையை ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்த்தி விநியோகம் செய்வதால் பாமர மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனிடையே மத்திய அரசு கேஸ் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %