0 0
Read Time:1 Minute, 22 Second

மயிலாடுதுறை, மார்ச்- 13:
மயிலாடுதுறை அருகே அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அமைந்துள்ள அம்பேத்கர் சிலையிடம் பாரதிய ஜனதா கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் அகோரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக பேரணியாக வந்து அம்பேத்கர் சிலை முன்பு திமுக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

பட்டியல் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியில் திமுக அரசு முறைகேடு செய்யாமல் முழு நீதியையும் பட்டியல் சமுதாய மக்களின் வளர்ச்சிக்காக வழங்கிட வேண்டும் எனக் கோரி அம்பேத்கர் சிலைக்கு மனுவினை கொடுத்து கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %