0 0
Read Time:2 Minute, 26 Second

தரங்கம்பாடி, மார்ச்.14:
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் வடக்கு ஒன்றியம் கீழப்பெரும்பள்ளம், காளகஸ்திநாதபுரம் ஊராட்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் 70 – வது பிறந்தநாள் விழாவையொட்டி திமுக சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு செம்பை வடக்கு ஒன்றிய செயலாளர் பி.எம்.அன்பழகன் தலைமை வைத்தார். மாவட்ட துணை செயலாளர்கள் மு. ஞானவேலன், செல்வமணி, தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம். ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் எம்.அப்துல்மாலிக், அமுர்த.விஜயகுமார், ஒன்றிய அவைத் தலைவர் சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி மன்றதலைவர் ஆரோக்கியசாமி, ஒன்றிய கழக பொருளாளர் சரவணன் ஆகியோர் வரவேற்று பேசினர்.

இதில் பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் மற்றும் தலைமை கழக பேச்சாளர் கரூர் முரலி ஆகியோர் கலந்து கொண்டு திமுக அரசின் சாதனைகளை குறித்து விளக்க உரை ஆற்றினார்.

இதில் முன்னாள் சட்டமன்ற எம்.எம்.சித்திக், விஜயபாலன், தரங்கை பேரூர் செயலாளர் முத்துராஜா, செம்பை ஒன்றிய துணை பெருந்தலைவர் மைனர் பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர்கள் வெற்றிவேல், கபிலன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பைலட், விஸ்வநாதன், ரெங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலச்சந்தர், ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி வள்ளி மதிவாணன் ஆகியோர் நன்றியுரை ஆற்றினர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %