0 0
Read Time:2 Minute, 27 Second

31.03.2023 வெள்ளிக்கிழமை வைத்தீஸ்வரன்கோயில், தருமை ஆதீனம், ஸ்ரீ குருஞானசம்பந்தர் மிஷன் ஸ்ரீ முத்தையா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா (GRADUATION DAY)
பள்ளியின் செயலர் V. பாஸ்கரன் அவர்கள் தலைமையில் விழா நடைபெற்றது.

விழாவில் சிறப்புவிருந்தினராக தருமபுரம் குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியை, திருமதி.S.அகிலாண்டேஸ்வரி கலந்து கொண்டு மழலையரையும் பள்ளிநிர்வாகத்தினரையும் வாழ்த்தி கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி கூறினார். பள்ளியின் முதல்வர் A.ஜெகதீஷ்குமார் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.

விழாவில் மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியின் ஓய்வு பெற்ற ஆசிரியை இந்திரானி, பொறியாளர் திரு.B.ரத்தினகுமார், வைத்தீஸ்வரன் கோயில் பள்ளியின் முன்னாள் முதல்வர்கள் R. சுப்பிரமணியன், K.கோபாலன், தருமபுரம் குருஞானசம்பந்தர் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கடேசன்,
மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மெட்ரிக் பள்ளி முதல்வர் S.சரவணன், திருக்கடையூர் குருஞானசம்பந்தர் மெட்ரிக் பள்ளி முதல்வர் R.ஸ்ரீகாந்த் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

UKG மாணவர்களுக்கு பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள்.சிறப்புடன் நடைபெற்றது.விழா நிகழ்ச்சிகளை UKG மாணவ மாணவிகள் தொகுத்து வழங்கினர்.

மாணவர்களின் பெற்றோர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை கண்டு களித்தனர்.
மேலும் பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலகத்தினர், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %