0 0
Read Time:1 Minute, 29 Second

புவனகிரி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா புவனகிரி பாலம் அருகே நடைபெற்றது .

இதற்கு புவனகிரி நகர செயலாளர் கந்தன் தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர் சண்முகம் மாவட்ட பிரதிநிதி பாண்டியன் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் மாயவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் பிரகாஷ் வரவேற்றார். விழாவில் புவனகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் புவனகிரி வட்டார அட்மா குழு தலைவருமான மனோகர் கலந்து கொண்டு கோடைகால நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் இளநீர் தர்பூசணி போன்றவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நடராஜன் துணை அமைப்பாளர் அரவிந்தன் நகர பொருளாளர் எழில் வேந்தன் மாவட்ட பிரதிநிதி செல்வராஜ் திமுக நிர்வாகிகள் திருஞானம் ராஜேந்திரன் உட்பட புவனகிரி ஒன்றிய நகர திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %