0 0
Read Time:1 Minute, 31 Second

மயிலாடுதுறை, ஏப்ரல்- 06;
தமிழகத்தின் 38 வது மாவட்டமாக நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் ஊர்காவல் படை வட்டாரத் தளபதியாக அலெக்சாண்டர், துணை வட்டார தளபதி கோதம் சந்த் ஆகியோரின் பதவி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தலைமையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது 150 ஊர்காவல் படையினர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், புதிதாக பொறுப்பு ஏற்ற கமாண்டர் மற்றும் துணை கமாண்டர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சான்றிதழை வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாக உள்ள 40 ஊர்க்காவல் படை பணியிடங்களுக்கு வருகின்ற ஏப்ரல் 30-ஆம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தெரிவித்துள்ளார்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %