0 0
Read Time:1 Minute, 9 Second

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு (வயது45). இவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாட்ஸ்-அப்பில் பழையாறு கிராமத்தில் உள்ள சிலரை அவதூறாக பேசி வெளியிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவர்கள் அன்பு மீது கொள்ளிடம் போலீசில் புகார் அளித்திருந்தனர். புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்புவை தேடி வந்தனர். இந்த நிலையில், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சிதம்பரத்திற்கு சென்று அங்கு இருந்த அன்புவை போலீசார் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %