0 0
Read Time:1 Minute, 30 Second

தரங்கம்பாடி, மே- 01:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருகில் ஹலரத் செய்யதினா செய்க்கு இஸ்மாயில் சாதாத் வலியுல்லாஹ் ஹலரத் செய்யதினா செய்யது சாஹிபு சாதாத் வலியுல்லாஹ் இவர்களின் 452 -வது ஆண்டு கந்தூரி விழா நடைபெற்றது. தரங்கம்பாடி கோட்டை தர்கா பஞ்சாயத்து, ஜமாத்தார்கள், கந்தூரி கமிட்டி உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டார்.

இதில் தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் எம் அப்துல் மாலிக், பேரூர் கழக திமுக செயலாளர் முத்துராஜா, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பொன் ராஜேந்திரன், பாவாசா செல்லப்பா மற்றும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் இந்து சமயத்தினர் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %