0 0
Read Time:1 Minute, 28 Second

தரங்கம்பாடி,மே 13:மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே அன்னவாசல் ஊராட்சியில் உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை மற்றும் தரங்கம்பாடி தாலுகா வட்ட வழங்கல் துறை சார்பில் மக்கள் குறைதீர் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது

முகாமுக்கு வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் உஷா பொன்னி வளவன், துணைத்தலைவர் பாரதி கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட வழங்கல் துறை வருவாய் அலுவலர் மரிய ஜோசப் ராஜ் வரவேற்றார்.

இதில் ரேஷன் கார்டு பெயர் மாற்றம், பிழை திருத்தம், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம் உள்ளிட்டவை தொடர்பாக ஏராளமான மனுக்கள் பெறப்பட்டது. இதில் ஒரு சில மனுக்கள் தவிர மற்ற மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. முகாமில் தரங்கம்பாடி வட்ட வழங்கல் கண்காணிப்பு குழு உறுப்பினர் சகாயராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %