0 0
Read Time:2 Minute, 0 Second

தரங்கம்படி, மே- 21:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, பொறையார் அடுத்து ராஜுவ்புரத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் சார்பாக மறைந்த முன்னாள் பிரதமர் பாரத ரத்னா ராஜீவ்காந்தியின் 32 ஆம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது.

இதில் மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ராஜகுமார் கலந்துகொண்டு ராஜீவ்காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் அஹிம்சையை நிலைநாட்டுவோம், 2024 ஆம் ஆண்டு ராகுல் காந்தி தலைமையில் ஆட்சியை அமைப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து சிலை அருகே பாரத் ஜோடா யாத்திரை நினைவு கொடிக்கம்பம் நட்டு கல்வெட்டு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. எம் எல் ஏ ராஜகுமார் கல்வெட்டைத்திறந்து கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணை சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஆக்கூர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார். வட்டார தலைவர்கள் சீனிவாசன், கார்த்திகேயன், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடிவில் தில்லை நடராஜன் நன்றியுரை கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %