0 0
Read Time:3 Minute, 15 Second

தலித் கிறிஸ்தவர் – இஸ்லாமியர் இட ஒதுக்கீட்டை மறுக்கும் ஜனாதிபதி ஆணையை உடனே நீக்கம் செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறையில் கருப்பு தின கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஆகஸ்ட்- 11:
இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் மதத்தின் பெயரால் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் நிலையை கண்டித்தும், தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வலியுறுத்தியும் மயிலாடுதுறையில் கருப்பு தின கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை மறை மாவட்ட எஸ்சி, எஸ்டி பணிக்குழு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் தார்சிஸ்ராஜ் அடிகளார் தலைமை வகித்தார். மயிலாடுதுறை மறைவட்ட தலைவர் ஜோசப் வரவேற்புரையாற்றினார். பங்கு தந்தையர்கள் மரியதாஸ், அருளானந்து, அமலதாஸ் ஜான், ஜெர்லின் கார்ட்டர், ஆனந்த், மைக்கேல் டைசன், ஜோ பிரான்சிஸ், பங்கிராஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மறை வட்ட தலைவர் தலித்தாஸ், நெல்சன், வினோத் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில், தலித் கிறிஸ்தவர், இஸ்லாமியர் இட ஒதுக்கீட்டை மறுக்கும் ஜனாதிபதி ஆணை 1950, பத்தி 3-ஐ உடனே நீக்கம் செய்ய வலியுறுத்தியும், மதத்தின் பெயரால் தலித் மக்களை பிரிக்கும் செயலை கண்டித்தும், நீதி அரசர் ரங்கநாத் மிஸ்ரா குழுவின் அறிக்கைப்படி தலித் கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் பரிந்துரையை உடனே செயல்படுத்த வலியுறுத்தியும், தலித் கிறிஸ்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்க கோரி தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை உடனே அமல்படுத்த மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர்.

இதில் மறை வட்ட நிர்வாகிகள் அமலதாஸ், பாஸ்கர், பிலமன்ராஜ், பீட்டர் தாஸ், எலிசபெத் ராணி, பரிமளதாஸ், சினேகா, அருட் சகோதரர்கள், அருட்சகோதரிகள், மற்றும் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, சீர்காழி, ஆத்துகுடி உள்ளிட்ட மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சார்ந்த சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %