1 0
Read Time:1 Minute, 46 Second

தரங்கம்பாடி, ஆகஸ்ட்- 12:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, கிளியனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் குறுவட்ட அளவிலான கபடி போட்டி 14 வயது. 17 வயறு மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டி நடைபெற்றது.

இந்த கபாடி போட்டி கிளியனூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் காந்தி தலைமையேற்று துவக்கி வைத்தார். திருக்களாச்சேரி ஹமீதியா மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சுதாகர் வரவேற்று பேசினார். பொறையார் கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சு.சுரேஷ், பெரம்பூர் காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜ கோபால், சங்கரன்பந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் பிரபாகர் ஆகியோர் முன்னிலையில் உடற்கல்வி துறையை துறையை சேர்ந்த ஆசிரியர்கள் நடுவர் பணியாற்றினார்கள்.

இப் போட்டியில் 200 க்கும் மேற்பட்ட மாணவிகளும் 350 க்கும் மேற்பட்ட மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பாக கபடி விளையாடினர், போட்டிக்கான விழா ஏற்பாடுகளை கிளியனூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் விநாயகம் செய்திருந்தார்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
33 %
Sad
Sad
33 %
Excited
Excited
33 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %