0 0
Read Time:1 Minute, 31 Second

மயிலாடுதுறை உள்கேணி ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் சார்பில் ஆடிப்பூர விழாவும், கஞ்சி கலயம் சுமந்து ஆன்மீக வீதி உலாவும் அதனைத் தொடர்ந்து கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கஞ்சி கலயம் சுமந்து ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் கலந்து கொண்ட ஆன்மீக ஊர்வலம் காவேரிக்கரை கிட்டப்பா பாலம் அருகில் இருந்து துவங்கியது.

இப்பேரணியை சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம், நகர்மன்ற உறுப்பினர் சபா ஆகியோர் துவக்கி வைத்தார்கள். அண்ணா வீதி,மேலஒத்த சரகு உள்பட முக்கிய வீதிகள் வழியாக வருகை தந்து உள்கேணி ஓம்சக்தி வார வழிபாட்டு மன்றத்தை வந்தடைந்தார்கள். தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவும், காஞ்சி பார்த்தல் நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடைபெற்றது. உள்கேணி வார வழிபாட்டு மன்றத்தினை சார்ந்தவர்கள்,கவிஞர் கங்கைஆறுமுகம் குடும்பத்தினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.ஓம்சக்தி மன்ற நிர்வாகி கௌரிசங்கர் நன்றி தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %