0 0
Read Time:1 Minute, 37 Second

சிதம்பரம் தில்லை மெட்ரிக் பள்ளியில் சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் தலைவர் கோ.நிர்மலா அவர்கள் தேசிய கொடி ஏற்றி இந்திய திருநாட்டின் 77வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவரும் உதவி ஆளுநரும் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் புல முதல்வருமான பேராசிரியர். கே. கதிரேசன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி சிறப்புரையாற்றினார். பள்ளியின் தாளாளர் செந்தில்குமார் விழா ஏற்பாடுகளை செய்து வரவேற்புரை நிகழ்த்தினார். ரொட்டேரியன்கள்,
மோகன், சஞ்சீவி, ஆர்.எஸ். ரவிச்சந்திரன், பாரி, மோத்திலால், தில்லை கோவிந்தராஜன், க.சின்னையன், பொருளாளர் சி.கே. ரமஷ் ஆணந்த் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பள்ளி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறுதியில் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் செயலாளர் எல்.சி.ஆர். கே. நடராஜன் நன்றி கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %