0 0
Read Time:1 Minute, 36 Second

தரங்கம்பாடி, ஆகஸ்ட்- 19;
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பொறையாரில் குறுவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி பொறையரர் கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது இதில் பள்ளியின் தாளாளர் டாக்டர் சுரேஷ் தலைமை வகித்தார்.

கிளியனூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் குறுவட்ட இணைச் செயலர் விநாயகம், சங்கரன் பந்தல் அரசினர் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் பிரபாகர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் முதல்வர் மனோன்மணி பார்வதி வரவேற்று பேசினார்.

போட்டியில் 45 பள்ளிகளை சார்ந்த மாணவ மாணவிகள் சுமார் 400 பேர் கலந்து கொண்டனர், போட்டி நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர் ஷாஜகான், விஸ்வநாதன், முத்துக்குமார்,, சத்யராஜ், ஜெயப்பிரதாப், பிட்டர், சரவணன் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது. தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு மாலை பரிசளிப்பு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் குணாளன் நன்றி கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %