0 0
Read Time:1 Minute, 45 Second

சிதம்பரத்தில் தேசிய விளையாட்டு தினத்தை ஒட்டி அண்ணாமலை பல்கலை கழக மைதானத்தில் டாக்டர் எம்ஜிஆர் சிலம்பம் பயிற்சி பள்ளி மற்றும் தளிர் சிலம்பம் பள்ளி இணைந்து நடத்தும் திறனாய்வு தேர்வு முகாம் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு தலைமை இராஜ மகாகுரு முருக பாண்டியன் திண்டுக்கல் , இராஜ மகாகுரு ராமகிருஷ்ணன் மதுரை மற்றும் மகாகுரு கிருஷ்ணசாமி சென்னை, சிறப்பு விருந்தினர்கள் சிலம்ப உலக நாயகன் காசிராஜா மலேசியா மற்றும் சாண்டோ இரத்தனம் மலேசியா ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக டாக்டர் செந்தில்வேலன், விளையாட்டு துறை தலைவர் அண்ணாமலை பல்கலைக்கழகம் டாக்டர் குலசேகர பெருமாள் பிள்ளை புல முதல்வர் கல்வியியல் துறை அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் மாஸ்டர் சேது லட்சுமி மதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், ஆசான்கள் கலைசெழியன், ரவி நெய்வேலி, பவர் பாலா, விஜய செந்தில் சென்னை மற்றும் கணேசன் கடலூர் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளித்தனர் இந்நிகழ்ச்சியை சிலம்ப ஆசிரியர்கள் உத்திராபதி மற்றும் சுஜாதா ஏற்பாடு செய்தனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %