1 0
Read Time:2 Minute, 11 Second

மயிலாடுதுறை, செப்- 28:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா சட்டநாதபுரம் – நாகப்பட்டினம் நான்கு வழி சாலை பணியில் ஈடுபட்டு வரும் வெல்ஸ்பன் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு பிரிவு சார்பில் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் முதலுதவி மற்றும் சாலை பாதுகாப்பு நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்ட நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார், மயிலாடுதுறை உதவி காவல் ஆய்வாளர் முகிலரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெல்ஸ்பன் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு அலுவலர் ஜூலியஸ் தூய மணி வரவேற்று பேசினார். வெல்ஸ்பன் நிறுவனத்தின் மூத்த மேலாளர் கோபிராஜ் மற்றும் பாதுகாப்பு அலுவலர் மணிமாறன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

முகாமில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் கிருபாகரன் தலைமையில், ரெட் கிராஸ் தலைமை பயிற்சியாளர் பெஞ்ஜமின் முதல் உதவி குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார், முகாமில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் கலந்து கொண்டு முதலுதவியை செயல்முறை விளக்கத்தை கேட்டும், பார்த்தும் தெரிந்து கொண்டனர். முகாமில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %