0 0
Read Time:1 Minute, 44 Second

கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இடையே நிலவி வரும் காவிரி பிரச்சனை குறித்து ரஜினிகாந்த் தனது கருத்தை தெரிவிக்க என்று கன்னட ஆதரவாளர் வாட்டாள் நாகராஜ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட ஆதரவு அமைப்பினர் வெள்ளிக்கிழமை கர்நாடகா பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் கர்நாடகாவில் பிறந்தவர் என்றும், இரு மாநிலங்களுக்கும் இடையே பல தசாப்தங்களாக நீடித்து வரும் நீர்ப் பங்கீடு பிரச்சனைக்கு தீர்வு காண அவர் குரல் எழுப்ப வேண்டும் என்றும் வாட்டாள் நாகராஜ் கூறினார்.

“ரஜினிகாந்த் கர்நாடகா வரக் கூடாது. அவர் கர்நாடகாவில் நுழைய தடை விதிக்க வேண்டும். மாநிலத்தில் ரஜினிகாந்த் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும். இது ஒரு எச்சரிக்கை. அவர் விளையாடக் கூடாது. அவர் கர்நாடகாவில் பிறந்து காவிரி நீரைக் குடித்து வளர்ந்ததால் இந்த விவகாரம் குறித்து பேச வேண்டும்” என்று வாட்டாள் நாகராஜ் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %