0 0
Read Time:1 Minute, 26 Second

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே விடுமுறை தொடர்பான முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மாணவர்களின் பாதுகாப்பு, உள்ளூர் வானிலை நிலவரம், உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு சூழலுக்கு ஏற்ப அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே விடுமுறை குறித்து முடிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர்கள் ஜானி டாம் வர்கீஸ், மகாபாரதி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %