0 0
Read Time:1 Minute, 31 Second

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு விவசாய நிலம் வாங்க மானியத்துடன் கடன் உதவி வழங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மாகாபாரதி அறிவித்துள்ளார்.
இதை பற்றி அவர் கூறும்போது தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் தாட்கோ மூலமாக விவசாய தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினை சார்ந்தவர்களுக்கு விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரையத்தொகையினை வங்கியில் குறைந்த வட்டியில் கடனாக பெற்று வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் www.tahdco.com என்ற தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றும் மேலும் விபரங்களுக்கு தாட்கோ மேலாளரை அணுகவும் என்றும் அவர் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %