0 0
Read Time:1 Minute, 42 Second

திருவாரூா் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

திருவாரூா் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்ற கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு திங்கள்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. திருவாரூா் வேலுடையாா் ஸ்போா்ட்ஸ் மற்றும் பேட்மிண்டன் அகாதெமி சாா்பில் சிலம்பப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், 14 வயதுக்குட்பட்ட மாணவிகள் ஒற்றைக் கம்பு வீச்சு பிரிவில் கட்டிமேடு பள்ளி மாணவி ச. மதுக்ஷரா இரண்டாம் இடம் பெற்றாா். இவருக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியா் மு.ச. பாலு தலைமை வகித்தாா்.

கட்டிமேடு ஊராட்சித் தலைவா் மாலினி ரவிச்சந்திரன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அப்துல் முனாப், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி ஜெ. தேன்மொழி உள்ளிட்டோா் பங்கேற்று மாணவி மற்றும் பயிற்சி அளித்த கராத்தே பயிற்சியாளா் ஏ. முத்துக்குமரன், உடற்கல்வி ஆசிரியா் என். நேதாஜி ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %