1 0
Read Time:1 Minute, 23 Second

சர்வதேச ஒலிம்பிக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட உலக கராத்தே கூட்டமைப்பின் உறுப்பினரான கராத்தே இந்தியா ஆர்கனைசேஷன் மற்றும் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டூ அசோசியேஷனால், கராத்தே பயிற்சியாளர் அங்கீகாரத்திற்கான தேர்வு 10.03.24 அன்று சென்னையில் நடத்தப்பட்டது. 200-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கத்தின் செயலாளரும் மாவட்ட கராத்தே அணி பயிற்சியாளருமான சென்சாய் கராத்தே கதிரவன் தேர்வில் வெற்றி பெற்று மாநில மற்றும் தேசிய பயிற்சியாளருக்கான அங்கீகாரம் பெற்ற மயிலாடுதுறை மாவட்டத்தின் ஒரே கராத்தே பயிற்சியாளர் என்ற பெருமையை பெற்றார். வெற்றி பெற்ற பயிற்சியாளரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. மீனா, ஆய்வாளர்கள் திரு. செல்வம், திரு. பாலு உள்ளிட்டோர் வாழ்த்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %