0 0
Read Time:1 Minute, 16 Second

கோவை: இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரியில் நேற்று செவிலியர் தின நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆஸ்பத்திரி டீன் ரவீந்திரன், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது டீன் ரவீந்திரன், திடீரென்று கொரோனா சிகிச்சைப்பிரிவில் பணி்புரியும் செவிலியர்களின் கால்களில் விழுந்து நீங்கள் தான் தற்போதைய சூழலில் கடவுள் என கூறி கண்ணீர் விட்டார். இது உருக்கமான நிகழ்ச்சியாக மாறியது. இது அங்கு கூடியிருந்த செவிலியர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது. பின்னர் அவர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தியும், கேக் வெட்டியும் செவிலியர் தினத்தை கொண்டாடினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %