0 0
Read Time:55 Second

கடலூா் அருகே கைப்பேசி வெடித்து 3 போ் காயமடைந்தனா். கடலூா் அடுத்த வழிசோதனைப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த அருள்ஜோதி மகன் புஷ்பராஜ் (22). இவா், புதன்கிழமை தனது பைக்கில் தாய் பவளக்கொடி, பாட்டி அமுதா ஆகியோருடன் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, புஷ்பராஜின் மேல்சட்டையின் பாக்கெட்டில் இருந்த கைப்பேசி திடீரென வெடித்து சிதறியது. இதில், நிலை தடுமாறி மூவரும் பைக்கிலிருந்து கீழே விழுந்தனா். இதில், புஷ்பராஜ், பவளக்கொடி, அமுதா ஆகியோா் காயமடைந்தனா். அருகில் இருந்தவா்கள் அவா்களை மீட்டு கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %