சிதம்பரம் தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் கார்த்தியாயினி சிதம்பரத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்தார் இந்தியாவில் 80 கோடி மக்களுக்கு பிரதம மந்திரியின் திட்டத்தின் கீழ் குடும்பத்தினருக்கு இலவசமாக 25 கிலோ அரிசி கோதுமை பிரதமர் மோடி ஆட்சியில் வழங்கப்பட்டது.
நெல் சோளம் கடலை உட்பட கொள்முதல் விலையை இரண்டு மடங்கு கொடுக்கப்பட்டது திமுக ஆட்சியில் போதை பொருள் மட்டுமே செய்தனர் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுக மீது குற்றச்சாட்டு வைத்தார் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில நிர்வாகி ராஜரத்தினம் கடலூர் மாவட்ட தலைவர் மதுரை மாநில பாஜக முன்னாள் பொது செயலாளர் ராகவன் வேட்பாளர் கார்த்தியாயினி கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி