0
0
Read Time:1 Minute, 21 Second
பாரதரத்னா, பாபாசாகேப், டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் உள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட அமைத்தலைவர் குமார் மாவட்ட சேர்மன் திருமாறன் மாவட்ட பாசறை செயலாளர் சண்முகம் மாவட்ட தலைமைக் கழக பேச்சாளர் கோபி தில்லை செல்வம் நகர செயலாளர் செந்தில்குமார் பேரவை செயலாளர் சுரேஷ் பாபு பன்னீர்செல்வம் மாவட்ட பிரதிநிதி மார்க்கெட் நாகராஜ் சண்முகப்பிரியன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி