குமராட்சி வர்த்தக சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது சங்க மூத்த முன்னோடி ஐயா சுப்புராயலு செட்டியார்- S.கீதா இவர்களின் 70 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு குமராட்சி வர்த்தக சங்கம் சார்பில் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் சுப்புராயுலு செட்டியார் குடும்பத்தினர் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இதில் பயனாளிகள் 250 பேர் கலந்து கலந்து கொண்டனர் கண் அறுவை சிகிச்சைக்காக 58 பேர் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதில் வர்த்தக சங்கத் தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் சிறப்ப அழைப்பாளராக கலந்து கொண்டார் செயலாளர் மணிவண்ணன் அனைவரையும் வரவேற்றார் ஒருங்கிணைப்பாளர் அப்துல் பாசித் துணைத் தலைவர்கள் துரைசிங்கம் பார்த்தசாரதி முஸ்தபா அப்துல்ரவுப் பாலமுருகன் குட்டிமணி செல்வம் பாபு செந்தில் துணை செயலாளர் மணிகண்டன் உடன் சபரி சத்தியமூர்த்தி மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் திருஞானம் சந்திரமௌலி ஆகியோர் உடன் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர்: பாலாஜி