0 0
Read Time:4 Minute, 22 Second

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 33 -ம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ்காந்தி சிலைக்கு முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம் சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் அனுசரிக்கப்பட்டது .

இந்நிகழ்ச்சிக்கு சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான தில்லை ஆர் மக்கின் தலைமை வைத்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம். என்.ராதா வரவேற்றார் மாவட்ட துணைத் தலைவரும் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளரு மன ராஜா. சம்பத்குமார் வட்டாரத் தலைவர்கள் சுந்தரராஜன் செழியன் மாவட்டத் துணைத் தலைவர் ஆர் சம்பந்த மூர்த்தி ஆர்.வி சின்ராஜ் ஒருங்கிணைக்கப்பட்ட மாவட்ட ஐ என் டி .யுசி சி மாவட்ட பொது செயலாளர் சாம்பமூர்த்தி ஊடகப்பிரிவு மாநில பொதுச் செயலாளர் சிவசக்தி ராஜா ஐ என் டி சி மாவட்ட தலைவர் வேல்முருகன் மகளிர் அணி மாவட்ட செயலாளர்கள் அஞ்சம்மாள் இந்திரா சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே .எஸ். அழகிரி ராஜீவ் காந்தி முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ராஜீவ் காந்தி நினைவு கொடிக்கம்பத்தில் காங்கிரஸ் கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசினார் .
முன்னதாக காந்தி முழு உருவ சிலைக்கு கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்.வி செந்தில்நாதன் கலந்து கொண்டு பயங்கரவாத எதிர்ப்பு உறுதி மொழியை வாசித்தார் .
இந்நிகழ்ச்சியில்
மாநில செயலாளர் ஜெயச்சந்திரன் மாநில பொதுக்குழு உறுப்பினர் குமராட்சி எம். ரங்கநாதன் கீரப்பாளையம் காங்கிரஸ் தலைவர் வெள்ளை என்கிற பார்த்திபன் இமய ராஜ் மாவட்டத் துணைத் தலைவர் ஜி. கே. குமார் பி வெங்கடேசன் வி. சண்முகசுந்தரம் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஷாஜகான் மாவட்ட துணைத் தலைவர்கள் ஜி ஆறுமுகம் இளங்கோவன் ஆட்டோ டி. குமார் சம்பந்தம் பேன்சி எஸ் எஸ் நடராஜன் வழக்கறிஞர் செல்வகுமார் மிஸ்கின் பாய் ஓ. பி. சி. அணி நகர தலைவர் பாலகிருஷ்ணன் கலைப்பிரிவு மாவட்ட தலைவர் பொன். மாதவ சர்மா கே.என். நாராயணசாமி சிறுபான்மை நகர தலைவர் அபு சதாத் வயிலம்பூர் ரவிச்சந்திரன் செல்ல பெருமாள் சுந்தரவேல் அன்பரசு சுமன் ஹரி பாஸ்கர் மணி பாலகுரு கஜேந்திரன் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் ராதா நந்தினி ருக்குமணி அமுதவல்லி உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டு பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்
நிகழ்ச்சியின் முடிவில் நகர செயல் தலைவர் தில்லை கோ.குமார் நன்றி கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %