0 0
Read Time:2 Minute, 43 Second

இதனிடையே பிரசாந்த் தனது நண்பர் ரமேஷ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது, வழிமறித்த டைல்ஸ் கார்த்திக் மற்றும் மகேந்திரன் ஆகிய இருவரும் பிரசாந்த் மற்றும் ரமேஷின் சாதி பெயரை கூறி இழிவாக பேசியதோடு, டைல்ஸ் கார்த்திக் தனது தலையால் பிராசந்தின் தலையை முட்டி எச்சரித்து அனுப்பியுள்ளார். இது தொடர்பாக பிரசாந்த் தனது அண்ணன் தாமரைச்செல்வனிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து தாமரைச்செல்வன் மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரும் நேரில் சென்று டைல்ஸ் கார்த்திக் மற்றும் தோப்பு மகேந்திரனை அடித்து கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த டைல்ஸ் கார்த்திக் மற்றும் தோப்பு மகேந்திரன் ஆகிய இருவரும்  தங்களுடன் கிரிக்கெட் விளையாடும் நண்பர்களை இணைத்துக் கொண்டு கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி இரவு சின்ராஜ் நகர் புற்றுகண் மாரியம்மன் கோயில் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த தாமரைச்செல்வன் மற்றும் பிரசாந்த், ஜெகதீஷ் ஆகிய மூவரையும் பயங்கர ஆயுதங்களுடன் சூழ்ந்துள்ளனர்.

தொடர்ந்து மூவரையும் கத்தியால் குத்திய கும்பல், தாமரைச்செல்வனை விரட்டி சென்றுள்ளது. தாமரைச்செல்வன் அங்கிருந்த மனோஜ் குமார் என்பவரது வீட்டுக்குள் புகுந்து தாளிட்டு கொண்ட நிலையில், கதவை உடைத்து உள்ளே நுழைந்த கும்பல், உள்ளே இருந்த தாமரைச்செல்வன் சரமாரியாக தாக்கி வெளியில் இழுத்து வந்துள்ளது. பிறகு தாங்கள் வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாளால் கொடூரமாக தாமரைச்செல்வனை வெட்டிய அந்த கும்பல், உலக்கையை எடுத்து கடுமையாகத் தாக்கி, கல்லை தலையில் போட்டு கொலை செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக 14 பேர் கொண்ட கும்பலை ரத்தினபுரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %