0 0
Read Time:1 Minute, 44 Second

மக்களுடன் முதல்வர் திட்டம்… மயிலாடுதுறை மாவட்டத்தில் 43 சிறப்பு முகாம்கள் அமைப்பு

இது கறித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :

மக்களுடன் முதல்வர் முகாம்களில் தமிழ்நாடு மின்சார வாரிய துறையில் புதிய மின் இணைப்பு, மின்கட்டண மாற்றம், பெயர் மாற்றம், மின்பளுமாற்றக்கட்டணம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் பட்டா பெயர் மாற்றம், வாரிசு சான்று, சாதிச்சான்று, வருமான சான்று, இருப்பிட சான்று மற்றும் இதர சான்றுகள் வழங்கப்படுகிறது.

எனவே செம்பனார்கோயில் வட்டாரம், மயிலாடுதுறை வட்டாரம், கொள்ளிடம் வட்டாரம், குத்தாலம் வட்டாரம், சீர்காழி வட்டாரம் ஆகிய வட்டாரங்களில் உள்ள கிராம பஞ்சாயத்துகளை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டு மேற்குறிப்பிட்டுள்ள துறைகளுக்கான சேவைகளுக்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து முகாம்களில் கலந்துகொண்டு பயனடையலாம். மேலும் இ-சேவை மையங்கள் மூலம் பதிவு செய்யப்படும் மனுக்களுக்கு 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூல் செய்யப்படும்என்றும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %