0 0
Read Time:1 Minute, 19 Second

புவனகிரி வட்டம் பி முட்லூர் கிராமம் ஆனையங்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில், மேம்பாலம் ஏறும் இடத்தில் ஹோட்டல் கோரு கார்டன் எதிரே,12.09.24 இன்று அதிகாலை சுமார் 5.00 மணியளவில் சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற TN 02 AQ 1116 என்ற பதிவு எண் கொண்ட ஸ்விப்ட் காரும், சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்ற TN 52 J 7898 என்ற பதிவு எண் கொண்ட லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், காரில் பயணம் செய்த ஒரு குழந்தை உள்பட ஐந்து நபர்கள் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.

இறந்தவர்களின் உடல் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது உள்ளது. மேற்படி சம்பவத்தினால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏதுமில்லை. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *