0 0
Read Time:1 Minute, 37 Second

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் படுக்கை வசதியை அதிகரிக்க த.மா.கா கோரிக்கை!

இதுகுறித்து அக்கட்சி சிதம்பரம் நகர தலைவர் மக்கீன் கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில்,
“கடலூர் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையாக அறிவித்தும் ஆனால் எந்தவித வசதியும் மேம்படுத்ப்படவில்லை மேலும் ராஜா முத்தையாமருத்துவ கல்லூரியில் கொரோனாசிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது நோயாளிகள் வருகை எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் படுக்கைகள் வசதியில்லாததால் பல நோயாளிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர் போர்க்கால அடிப்படையில் போதிய அளவில் மருத்துவர்கள் செவிலியர்கள் நியமிக்கப்பட வேண்டும் மேலும் மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வசதியை செய்து தர வேண்டும்”

என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியாளர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %