0 0
Read Time:1 Minute, 24 Second

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நண்பர்களுடன் இணைந்து கொரோனா நிவாரணம் வழங்கி அசத்தும் IT என்ஜினீயர்.

சிதம்பரம் அடுத்த வண்டிகேட் பகுதியை சார்ந்த சக்தீஸ்வரன் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் இணைந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு IT Engineer இதுவரை உதவி உள்ளார்.

கொரோனா இரண்டாவது அலையில் பொதுமக்கள் பெரிதும் அவதியுற்றுள்ளதை அறிந்து மென்பொருள் என்ஜினீயர் சக்தீஸ்வரன் தனது குடும்ப நண்பர்களின் உதவியுடன் கொரோனா நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதுவரை 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு, 1 கிலோ சக்கரை, 1 கிலோ உப்பு உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகளை செய்துவருகிறார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் அடிப்படை வாழ்வாதாரமின்றி அவதிப்படும் நிலையில் இதுபோன்ற உதவி பெரும் பயனுள்ளதாக இருப்பதால் மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %