0 0
Read Time:1 Minute, 34 Second

சிதம்பரம்: கொரோனா நோய் தடுப்புப் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஆய்வு!

சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டு பகுதிகளில் நடைபெற்று வரும் கொரோனா நோய் தடுப்புப் பணிகளை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் நான்கு வீதிகளிலும் கிருமிநாசினி அளிக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி பொறியாளர் மகாதேவன், மாவட்டக் கழக அவைத் தலைவர் எம்.எஸ்.என்.குமார், முன்னாள் நகர கழக செயலாளர் தோப்புகே.சுந்தர், மாவட்ட பாசறை செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், தலைமை கழக பேச்சாளர் தில்லை கோபி, முன்னாள் ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் சுரேஷ் பாபு, மாணவர் அணி பொருளாளர் சங்கர், நகரக் கழக துணைச் செயலாளர் கே.ஆர்.ஜி. சாமிநாதன், நகர இளைஞரணி செயலாளர் கருப்பு ராஜா, நகர கழக பொருளாளர் மருதவாணன், நிர்வாகிகள் காதர் கான், மணிராஜ், கேஆர்ஜி செல்லப்பா, ஏ.டி.என்.முத்து, நகராட்சி பொறியியல் பிரிவு கண்காணிப்பாளர் சலீம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

செய்தியாளர்:பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %