0 0
Read Time:2 Minute, 42 Second

கடலூர் மாவட்டம், ஆலடி காவல் நிலைய எல்லைக்குட்பட்டது வீரட்டிக்குப்பம்  கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பழனிவேல் வயது 75. இவருக்கு 62 வயதில் அஞ்சுகம் என்ற மனைவியும் 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனிதனி குடும்பமாக வசித்து வருகின்றனர். 

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக விருத்தாசலம் அருகே உள்ள பொன்னேரி என்ற ஊரில் வேறு ஒரு பெண்ணுடன் பழனிவேலுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.  நாளடைவில் அந்தப் பெண்ணுடனேயே தங்கி குடும்பமும் நடத்தி வந்துள்ளார். அதே நேரத்தில் அவ்வப்போது வீரட்டிக்குப்பத்தில் உள்ள சொந்த மனைவி மற்றும் பிள்ளைகளை சென்று அடிக்கடி பார்த்துவிட்டு மீண்டும் பொன்னேரிக்கு வந்துவிடுவார். காலப்போக்கில் யாரும் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்த நிலையில், நேற்று முன்தினம் பொன்னேரியில் அவருடன் சேர்ந்து வாழ்ந்த பெண்ணின் வீட்டில் இருந்தபோது உடல்நிலை சரியில்லாமல் பழனிவேல் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவரது சொந்த மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் அவர்கள் அனைவரும் அங்கு சென்றனர். கணவரின் உடலை பார்த்து கதறி அழுத அஞ்சுகம், தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அவரது புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்துபோன பழனிவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அஞ்சுகம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பழனிவேல் உயிரிழப்பு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %