0 0
Read Time:1 Minute, 33 Second

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க உதவும் வகையில் சிட்டி யூனியன் வங்கி சாா்பில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் 10 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்க முடிவெடுக்கப்பட்டு, முதற்கட்டமாக 4 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை அண்மையில் வழங்கினா். இந்நிலையில், மயிலாடுதுறையில் உள்ள சிட்டி யூனியன் வங்கிக் கிளையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், வங்கியின் துணை பொது மேலாளா் ராமசாமி, கிளை மேலாளா் மகாதேவன் ஆகியோா் எஞ்சிய 6 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை மயிலாடுதுறை அரசு மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா். ராஜசேகா் முன்னிலையில் மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாரிடம் வழங்கினா்.

நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளா் செல்வராஜ், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் ராம.சேயோன், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினா் நவாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிருபர்: யுவராஜ், மயிலை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %