0 0
Read Time:1 Minute, 30 Second

சிதம்பரம்: தமாகா சார்பில் கொரானா தொற்று காரணமாக பொது மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து மனு!

சிதம்பரம்: கொரானா தொற்று காரணமாக பொது மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து சிதம்பரம் நகர ஆணையாரிடம் மாவட்ட நகர நிர்வாகிகள் மற்றும் முன்னாள் தமாகா கவுன்சிலர்கள் மனு வழங்கினர்.

சிதம்பரம் நகர தமாகா தலைவர் தில்லை R.மக்கின் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் K.நாகராஜன்,ராஜா சம்பத்குமார், மாவட்ட மகளிரணி தலைவி K.ராஜலெட்சுமி,மாவட்ட செயலாளர் தில்லை செல்வி,நகர பொருளாலர் S.S.நடராஜன், மாணவரணி தலைவர் N.மணிகண்டன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் மீனா செல்வம் , கோ.ஜனகம் ஆகியோர் நேரில் சென்று சிதம்பரம் ஆணையாளர் 33 வார்டுகளுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்த மனு வழங்கப்பட்டது.

இந்த மனுவை பெற்றுக்கொண்டு உடனடியாக அந்தப்பகுதியில் செய்ய வேண்டிய பணிகளை செய்வதாக சிதம்பரம் நகர ஆணையர் உறுதியளித்தார்.

செய்தியாளர்:பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %