0 0
Read Time:1 Minute, 27 Second

காட்டுமன்னார்கோயில்: ஓவியர்கள் சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம்!.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் ஓவியர் நல சங்கம் சார்பில் வட்டார தலைவர் கே எஸ் அர்ஜுன் கொரோனா சம்பந்தமான விழிப்புணர்வு ஓவியத்தை காட்டுமன்னார்கோயில் பெரியகுளம் அம்பேத்கர் சிலை அருகில் வரைந்ததை காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் ராமதாஸ், காவல் ஆய்வாளர் குணபாலன் பேரூராட்சி ஆய்வாளர் துரைராஜ் பார்வையிட்டு சென்றனர். மேலும் இது போன்ற விழிப்புணர்வு ஓவியத்தை காட்டுமன்னார்கோவில் கடைவீதி மற்றும் லால்பேட்டை பகுதியில் வரைய வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். காட்டுமன்னார் கோயிலில் ஓவியர்கள் சங்கம் தாமாக முன்வந்து பொதுமக்கள் நலனுக்காக கொரோனா விழிப்புணர்வு ஓவியத்தை வரைந்ததை பாராட்டினார்கள். இந்நிகழ்ச்சியில் அனைத்து ஓவியர்களும் கலந்துக் கொண்டனர்.

செய்தியாளர்:மன்னை, விஜயகாந்த்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %