0 0
Read Time:1 Minute, 29 Second

தனிமைபடுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பை ரோட்டரி சங்கத்தால் வழங்கப்பட்டது!

ரோட்டரி மண்டலம் 5-ன் சார்பாக தனிமைபடுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு தேவையான சோப், பவுடர், எண்ணெய், பிரட் , பிஸ்கட் , கடலை மிட்டாய், மாஸ்க், சானிடைசர் சிறிய துண்டு, சீப்பு, பேரீட்சை, கபசுர பவுடர், சத்துமாவு, பிரஷ், பேஸ்ட், கிராம்பு வறுகடலை ஆகியவை அடங்கிய சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான 150 நபர்களுக்கான உதவி பொருட்கள் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் IAS அவர்களிடம் மண்டல துணை ஆளுநர் P. முஹம்மது யாசின் வழங்கினார். மண்டல செயலாளர் இ. மஹபூப் உசேன் முன்னிலையில் மாவட்ட தலைவர் எம். தீபக்குமார், சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் பி. மோத்திலால், சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் பேரா. சீனிவாசன், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்க தேர்வு தலைவர் சீனுவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %