1 0
Read Time:1 Minute, 29 Second

செம்பனார்கோவிலில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த  1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளரை கைது செய்து உள்ளனர். 

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே பரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மயில்வாகனன்(வயது36). இவர் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் செம்பனார்கோவில் போலீசார் விரைந்து சென்று மயில்வாகனன் வீட்டில் நேற்று சோதனையிட்டனர். 

சோதனையில் வீட்டில் ரூ.40ஆயிரம் மதிப்புள்ள 1¼ கிலோ கஞ்சா பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மயில்வாகனனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %