0 0
Read Time:2 Minute, 7 Second

சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இலவச உணவு வழங்கல்!

சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், நோயாளிகளுக்கு உதவியாய் இருப்பர்வர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு வழங்கிட 500 பிரியாணி உணவு பொட்டலங்களை கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான ஆ.அருண்மொழித்தேவன், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. பாண்டியன் ஆகியோர் மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெயஸ்ரீ, டயட்டீஷியன் தேவி, மேட்ரன் செளடாம்பாள் ஆகியோரிடம் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டக் கழக அவைத் தலைவரும் கூட்டுறவு சங்கத் தலைவருமான எம்.எஸ்.என்.குமார், கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர், சேத்தியாதோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவரும் அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினருமான கானூர். கோ.பால சுந்தரம், தலைமை கழக பேச்சாளர் தில்லை கோபி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் முருகையன், நகர இளைஞரணி செயலாளர் கருப்பு ராஜா, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மணிராஜ், ஒன்றிய ஐ.டி.விங் துணை செயலாளர் மணிவண்ணன், நகர இளைஞரணி துணை செயலாளர் வெங்கடேசன் மற்றும் கழக நிர்வாகிகள் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்:பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %