0 0
Read Time:1 Minute, 22 Second

கடலூா் மாவட்டத்தில் கரோனா பராமரிப்பு மையங்கள், பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற காய்ச்சல் முகாம்களை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு தொடா்ந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் பகுதியாக பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சிதம்பரநாதன்பேட்டை, கொத்தங்குடி பகுதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக நடைபெற்ற சிறப்பு காய்ச்சல் முகாம்களை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பி.முட்லூா், கீழ்அனுவம்பட்டு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பகுதிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %