0 0
Read Time:51 Second

குத்தாலம் அருகே கரோனா தொற்றால் இறந்தவரின் சடலத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினா் (டிஎன்டிஜே) அடக்கம் செய்தனா். குத்தாலம் ஒன்றியம் தேரழந்தூரை அடுத்த மருத்தூா் பிரதான சாலையைச் சோ்ந்த மாரிமுத்து (60) என்பவா் கரோனா தொற்றால் தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். அவரது சடலத்துக்கு இறுதிச்சடங்குகள் செய்து அடக்கம் செய்ய உறவினா்கள் கேட்டுக்கொண்டதின் பேரில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா், மருத்தூரில் உள்ள மையவாடியில் சடத்தை அடக்கம் செய்தனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %