0 0
Read Time:1 Minute, 36 Second

சசிகலா அதிமுகவில் இல்லை, அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்து விட்டார் என கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, வேண்டுமென்றே குழப்பத்தை விளைவிப்பதற்காக சசிகலா பேசியதாக ஆடியோ வெளியாகிறது என குற்றம்சாட்டியுள்ளார்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஜெயக்குமார் உள்ளிட்ட 9 மாவட்ட செயலாளர்களுடன், அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு மத்திய அரசிடம் வலியுறுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டார்.

கொரோனா பரிசோதனை முடிவுகளை தெரிவிக்க 3 முதல் 4 நாட்கள் ஆவதாகவும், ஒரே நாளில் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

அரசியலைவிட்டே விலகுவதாக அறிவித்து விட்ட சசிகலாவின் பெயரில், வேண்டுமென்றே குழப்பத்தை விளைவிப்பதாக, ஆடியோ வெளியாவதாகவும் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %