சிதம்பரம்:தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே எஸ் அழகிரி சிதம்பரம் சார் ஆட்சியரிடம் மனு அளித்தார்!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கொரானா தடுப்பூசியை அனைத்து மாநில அரசுகளுக்கும் முற்றிலும் இலவசமாகவும், விரைவாகவும், பாரபட்சமின்றி மத்திய அரசு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் இ.ஆ. ப அவர்களை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினார்.
இந்நிகழ்வில் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் M.R.R ராதாகிருஷ்ணன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் N.V செந்தில்நாதன், மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் திலகர், மாநில பொது செயலாளர் P.சேரன், மாநில செயலாளர் P.P.K சித்தார்த்தன், திட்டக்குடி அன்பரசு, ரஞ்சித்குமார், ராஜாராம், வைத்தியநாதசாமி, தம்பு, செழியன், விஜய் ஆண்டனி, ராஜன், ஜெயச்சந்திரன், மோகன்தாஸ், பழனி, ஜி கே குமார், வெள்ளை பார்த்திபன், விநாயகம், வல்லம்படுகை கணேசன், ராஜரத்தினம், கஜேந்திரன், கட்டாரி சந்திரசேகர், குமரவேல், மிஸ்கின், கார்த்தி, நாராயணசாமி, கரோலின் அண்ணாதுரை ஆகியோர் கொரானா வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.