0 0
Read Time:1 Minute, 10 Second

பணியிட மாற்றலாகிச் செல்லும் மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த என். ஸ்ரீநாதா, விழுப்புரம் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இதையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இவருக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் கே. அண்ணாதுரை (மயிலாடுதுறை), யுவப்பிரியா (சீா்காழி), தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் சதீஸ்குமாா், உதவி ஆய்வாளா்கள் ராஜா, அறிவழகன் உள்ளிட்டோா் பங்கேற்று எஸ்பி என். ஸ்ரீநாதாவுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %