0 0
Read Time:1 Minute, 26 Second

கள்ளக்குறிச்சி மாவட்டம் சேராபட்டு கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி ஜெயலட்சுமிக்கு நேற்றிரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயலட்சுமியை கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் உறவினர்கள் கொண்டு சென்றுள்ளனர். ஏரிக்கரை சாலையில் வந்து கொண்டிருந்த ஆம்புலன்சின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் நிலை தடுமாறிய ஆம்புலன்ஸ் சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துகுள்ளானது.

இதில் கர்ப்பிணி ஜெயலட்சுமியின் உறவினர்கள் செல்வி, அம்பிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஜெயலட்சுமி, பலத்த காயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

மேலும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆகியோர் காயமடைந்து சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %