0 0
Read Time:1 Minute, 45 Second

மயிலாடுதுறை அருகே கருப்பு பூஞ்சை நோய் தாக்கி பெண் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பிள்ளை பெருமாநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (48). விவசாயி. இவரது மனைவி தீபா. இவர் பிள்ளை பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த மே மாதம் முனுசாமியின் தந்தை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.

அவரை தொடர்ந்து, கடந்த மே மாதம் 26ஆம் தேதி முனுசாமிக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின்போது, முனுசாமிக்கு வலது கண்ணில் பார்வை குறைபாடு ஏற்பட்டு, வலி இருந்து உள்ளது.

இதனால் அவர், மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முனுசாமிக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்த நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று முனுசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %