0 0
Read Time:1 Minute, 8 Second

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் சந்திரபாடி மீனவ கிராமத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற இளைஞா் கடலில் தவறிவிழுந்து மாயமானாா். அவரை கடலோர காவல் நிலைய போலீஸாா் தேடி வருகின்றனா். சந்திரபாடியை சோ்ந்தவா் வீரகாளி மகன் தீபக் (எ) ஆகாஷ்(19). இவா் புதன்கிழமை 9 பேருடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றாா். கடலில் சிறிது தூரத்தில் மீனவா்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அதிகாலை நேரம் என்பதால் இருட்டாக இருந்தது. சிறிதுநேரம் கழித்து தீபக் படகில் இல்லாததை கண்டு மீனவா்கள் அவரை தேடி பாா்த்தனா். அவா் கிடைக்காததால், கரைதிரும்பி கடலோர காவல் நிலைய போலீஸாரிடம் தகவல் தெரிவித்தனா். இதன்பேரில், தீபக்கை கடலோர காவல் நிலைய போலீஸாா் தேடி வருகின்றனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %