0 0
Read Time:1 Minute, 14 Second

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் திருக்கோயில்களில் மாத ஊதியம் இன்றி பணியாற்றிவரும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு தமிழக முதல்வர் அறிவித்துள்ள கொரோனா கால நிவாரண பொருட்கள் 10கிலோ அரிசி 15 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் விழா இன்று காட்டுமன்னார்கோயில் அருள்மிகு வீரநாராயன திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வை காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன்
துவக்கிவைத்தார்.வட்டாட்சியர் இராமதாஸ் சமூக நல வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் ஜெயச்செல்வி அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர்: கிருஷ்ணராஜ், காட்டுமன்னார்கோயில்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %